Monday, March 13, 2023

9. ஆதி பர்வம் - 7. சந்தனு

பிரதீபன், ஒரு சக்திவாய்ந்த மன்னராக இருந்ததுடன், ஒரு துறவியாகவும் இருந்தார். அவர் அடிக்கடி கங்கை நதிக்கரையில் அமர்ந்து தவம் செய்வார்.

ஒரு நாள், அவர் ஆற்றங்கரையில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, ​​​​கங்கை ஒரு அழகான பெண் வடிவத்தை எடுத்து அவரது வலது மடியில் அமர்ந்தாள்.

மன்னன் அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, ​​கங்கை தான் அவனை மணந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னாள்.

"வலது தொடை மகள்கள் மற்றும் மருமகள்கள் அமரும் இடம் - இடது தொடைதான் மனைவிக்கான இருக்கை" என்று பிரதீபா அவளிடம் கூறினார். கங்கை தன் வலது மடியில் அமர்ந்திருந்ததால், அவளால் தன் மனைவியாக முடியாது, என்று பிரதீபன் தெளிவுபடுத்தினார்.

"அப்படியானால் என்னை உங்கள் மருமகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்! நான் உங்கள் மகனை மகிழ்வித்து, அவனுக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து, அவன் சொர்க்கத்தை அடைய உதவுவேன்!" என்று கங்கை பிரதீபனிடம் வேண்டிக் கொண்டாள்.

ஆயினும் தன் செயல்களைப் பற்றி அவருடைய மகன் ஒருபோதும் கேள்வி கேட்கக்கூடாது என்றும் கங்கை பிரதீபாவிடம் கூறினாள். பிறகு அவள் தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டாள்.

சிறிது காலம் கழித்து, பிரதீபனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரம்மாவின் சாபப்படி மகாபிஷாதான்அவருக்கு மகனாகப் பிறந்தான். அவனுக்கு சாந்தனு என்று பெயரிடப்பட்டது.‘சாந்தி’ என்ற சொல்லின்ன் அடிப்படையில் அமைந்த இந்தப் பெயர் அமைதி மற்றும் சமநிலையைக் குறிக்கும் விதத்தில் அளிக்கப்பட்டது - அதாவது பிரதிபாவின் மனநிலை!

சந்தனுவும் தன் தந்தையைப் போலவே நல்லொழுக்கமுள்ள மனிதனாக வளர்ந்தான்.

சந்தனு வாலிபப் பருவத்தை அடைந்ததும், அவன் தந்தை பிரதீபன் அவனிடம் “சிறிது கலத்துக்கு முன்பு, ஒரு அழகான இளம் பெண் என்னை அணுகி எனக்குப் பிறக்கப் போகும் மகனைத்  திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாள். உனக்குக் குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்து உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்றாள். அவர் உன்னை அணுகி உன்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்தால், அவள் கோரிக்கையை ஏற்றுக் கொள். ஆனால், அவளுடைய எந்தச் செயலையும் நீ கேள்வி கேட்கக் கூடாது என்றும் அவள் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறாள்" என்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு, பிரதீபன் பின்னர் பிரதீபன் சந்தனுவுக்கு முடிசூட்டி, அவனை மன்னனாக்கி விட்டு,  தவம் செய்யக் காட்டுக்குச் சென்றார்.

சந்தனு மன்னன் வேட்டையாடுவதில்திக விருப்பம் கொண்டிருந்தான்.தன்  பெரும்பாலான நேரத்தைக் காட்டில் விலங்குகளை வேட்டையாடுவதில் செலவு செய்தான்.

ரு நாள், சந்தனு வேட்டைக்காகக் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது, கங்கைக் கரையில் ஒரு அழகான பெண்ணைக் கண்டான். அவள் தோற்றத்தில் உடனே  மயங்கிய சந்தனு அவளை நெருங்கி அவள் யார் என்று கேட்டான்.

அந்தப் பெண் தான் யார் என்பதை வெளிப்படுத்த மறுத்து விட்டாள், ஆனால் சந்தனுவைத்  திருமணம் செய்து கொள்ள அவள் ஒப்புக் கொண்டாள். ஆயினும், தனது எந்தச் செயலையும், அது  ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், அதைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்ற தன் நிபந்தனையையும் அவள் தெரிவித்தாள்.

சந்தனு அவளது நிபந்தனையை ஏற்றுக் கொண்டான். அவள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே அவளை மணந்து கொண்டான். திருமணத்துக்குப் பிறகு, கங்கை மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டாள், இருவரும் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்ந்தனர்.

சிறிது காலம் கழித்து அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பெற்றெடுத்த உடனேயே, கங்கை குழந்தையை எடுத்துச் சென்று அதை கங்கையாற்றில் மூழ்கடித்தாள்.

இந்தக் கொடூரச் செயலால் சந்தனு அதிர்ச்சியடைந்தான். ஆயினும், திருமணத்துக்கு முன் கங்கை விதித்த நிபந்தனையையும், அதைத் தான் ஏற்றுக் கொண்டதையும் கருத்தில் கொண்டு, அவளைக் கேள்வி கேட்காமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் சந்தனு.

அவர்களுக்குப் பிறந்த இரண்டவது குழந்தையையும் கங்கை இவ்வாறே நீரில் மூழ்கடித்தாள். அடுத்துப் பிறந்த ஐந்து குழந்தைகளையும் கூட இதே போன்று நீரில் மூழ்கடித்தாள்.

எட்டாவது குழந்தையை கங்கை தண்ணீரில் மூழ்கடிக்கக முயன்றபோது, ​​​​சந்தனு அவளைத் தடுத்து, அவள் ஏன் இத்தகைய கொடூரமான செயலைச் செய்கிறாள் என்று கேட்டான்.

சந்தனு அவ்வாறு கேட்டதும், "இந்த எட்டாவது குழந்தையை மூழ்கடிக்க மாட்டேன்"  என்று கூறிய கங்கை, தான் விதித்த நிபந்தனையை மீறி சந்தனு தன செயல் குறித்துக் கேள்வி எழுப்பியதால் தான் அவனை விட்டுப் பிரிய வேண்டும் என்றும் தெரிவித்தாள்.

தான் யார் என்பதை அப்போது சந்தனுவுக்கு வெளிப்படுத்திய கங்கை, அஷ்ட வசுக்கள் பெற்ற சாபம், அஷ்ட வசுக்களின் தாயாக இருக்கத் தான் சம்மதித்தது ஆகிய விவரங்களை சந்தனுவிடம் விவரித்தாள்.

அஷ்ட வசுக்கள் உலகில் மனிதர்களாகப் பிறப்பதற்குக் காரணமான சாபம் பற்றி சந்தனு அறிந்து கொள்ள விரும்பினான். பிறகு கங்கை அஷ்ட வசுக்களின் கதையை சந்தனுவிடம் விரிவாகக் கூறினாள்.

10. ஆதிபர்வம் - 8. அஷ்ட வசுக்கள்

8. ஆதிபர்வம் - 6. மகாபிஷன்

No comments:

Post a Comment